Tuesday 26 November 2019


ஓய்வுக்கு இல்லை...
33 வருட எல்லை....

BSNL நிறுவனத்தில்...
விருப்ப ஓய்வுத்திட்டம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 
பலவிதமான வதந்திகள் தொடர்ந்து வாந்தி எடுக்கப்பட்டன. 
வலைத்தளங்கள் பிழைத்தளங்களாக 
தவறான செய்திகளைத் தொடர்ந்து பரப்பி வந்தன. 

அவற்றுள் ஒன்றுதான் 33 வருடம் சேவை முடித்த மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு வயதான 60ஐ அடையாவிட்டாலும் 
அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்ற பிரபல வதந்தி. 

தற்போது மத்திய அரசு அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஆந்திர மாநிலத்து YSR கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்
திரு.கிருஷ்ண தேவராயலு MP அவர்கள்
மத்திய அரசு ஊழியர்கள் 60வயதை அடையும் முன்பே 
33 வயது சேவைக்காலம் முடித்திருந்தால் அவர்களுக்கு ஓய்வு அளிக்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதா? 
என கேள்வி எழுப்பியிருந்தார்.

33 வருட சேவை புரிந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு 
60 வயதுக்கு முன்பே ஓய்வு கொடுக்கும் திட்டம் எதுவும் 
மத்திய அரசில் இல்லை என 25/11/2019 அன்று நிதி அமைச்சக துணை அமைச்சர் திரு.தாக்கூர் நாடாளுமன்றத்தில் 
அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன் 33 வருட வதந்திக்கு 
முற்றுப்புள்ளி வைக்கப்படும் என நம்புவோம்...
இனி அடுத்த வதந்தியைக் கேட்க தயாராவோம்...

No comments:

Post a Comment