Monday 25 November 2019


HBA – ஆயுள் காப்பீடும்... அபராத வட்டியும்...

31/03/2001 வரை ஒப்புதல் அளிக்கப்பட்ட
HBA வீட்டுக்கடன்கள்  DOT கணக்கிலும்,
01/04/2001க்கு பின்பு ஒப்புதல் அளிக்கப்பட்ட 
HBA வீட்டுக்கடன்கள்  BSNL கணக்கிலும் வருகின்றன. 

வீட்டுக்கடன் வாங்கியவர்கள் தங்களது வீடுகளை
ஆயுள் காப்பீடு செய்ய வேண்டும் என்பது HBA விதி. 
அவ்வாறு ஆயுள் காப்பீடு செய்தால் வீட்டுக்கடன்
வட்டியில் 2.5 சத சலுகை அளிக்கப்படும். 
ஆயுள் காப்பீடு செய்யாவிட்டால் 2.5 சதம் 
அபராத வட்டியாக வசூலிக்கப்படும். இந்த அபராத வட்டி 
கடன்காலம் முழுமைக்கும் வசூலிக்கப்படும்.

ஒருவரது கடன்காலம் 20 ஆண்டுகள் என்று வைத்துக்கொள்வோம். 
அவர் 15 ஆண்டுகளுக்கு ஆயுள் காப்பீடு செய்திருந்து 
மீதி 5 ஆண்டுகளுக்கு ஆயுள் காப்பீடு செய்யாவிட்டாலும் 
ஒட்டுமொத்த 20 ஆண்டுகளுக்கும் 
அவர் 2.5 சத அபராத வட்டி கட்ட வேண்டும்.

இதில் 2 ஆண்டுகள் வரை ஆயுள் காப்பீடு செய்யாமல் இருந்து மீதிக்காலம் முழுமைக்கும் ஆயுள் காப்பீடு செய்திருந்தால்  
அபராத வட்டி விதிக்காமல் தள்ளுபடி செய்யும் அதிகாரம் 
மாவட்ட அதிகாரிகளுக்கு உண்டு. 

கடன் வாங்கி  வீடு கட்டும் எவரும் விதிகளைப் பார்ப்பதில்லை. 
விதியே என்றுதான் வீடுகளைக் கட்டுகின்றனர். 
எனவே ஆயுள் காப்பீடு செய்யப் பலர் தவறி விடுகின்றனர். 
வீட்டு லோன் முடியும் தருவாயில்...
நிர்வாகத்திடம் மாட்டிக்கொண்டு 
பல ஆயிரம் ரூபாய்களை அபராத வட்டியாகக் கட்டி 
கண்களைக் குளமாக்குகின்றனர்.

இந்த அபராத வட்டி விவகாரம் நீண்ட நாட்களாக
மத்திய அரசு ஊழியர்களின் தீராதப் பிரச்சினையாக இருந்தது. 
இப்பிரச்சினையை ஆய்வு செய்த மத்திய அரசு வீட்டுக்கடன் வாங்கியவர்கள் ஆயுள் காப்பீடு செய்யாத காலத்திற்கு மட்டும் 
அபராத வட்டி கட்டினால் போதும் எனவும், 
அபராத வட்டியை 2.5 சதத்திலிருந்து 2 சதமாகக் குறைத்தும் 09/11/2017 அன்று உத்திரவிட்டது. 

இந்த உத்திரவு BSNL நிர்வாகத்தால் இன்னும் வழிமொழியப்படவில்லை. விருப்ப ஓய்வுத்திட்டத்தில் பல ஆயிரம் ஊழியர்கள் வெளியேறும் நிலையில் வீட்டுக்கடன் வாங்கியவர்கள் தங்களது வீட்டுக்கடனை ஆயுள் காப்பீட்டு உள்பட அனைத்து நிலுவைகளையும் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. 

எனவே மத்திய அரசின் 09/11/2017 உத்திரவு BSNLலில் அமுல்படுத்தப்பட்டால் பல தோழர்கள் பயன் பெறுவார்கள். 

மாநிலச்சங்கத்திற்கும்... மத்தியசங்கத்திற்கும்...
இப்பிரச்சினையைக் கொண்டு சென்றுள்ளோம்.
சாதகமாக  தீர்த்து வைப்பார்கள் என்று நம்புகிறோம்.

விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களை மனமகிழ்ச்சியோடு 
அனுப்பி வைப்போம் என்று நமது CMD உறுதி அளித்துள்ளார். 

கடன்பட்ட நமது தோழர்களையும்...
அபராத வட்டியில் இருந்து விடுவித்து 
நமது நிர்வாகம் மனமகிழ்ச்சியைத் தரும் என்று நம்புவோம்.

No comments:

Post a Comment