Wednesday 27 November 2019


ஓய்வூதிய விண்ணப்பங்கள்

விருப்ப ஓய்வில் செல்லும் தோழர்களின்
ஓய்வூதிய விண்ணப்பங்கள் சம்பந்தமாக
மாநில நிர்வாகம் வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது....

அதன்படி...
விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்கள்
தங்கள் ஓய்வூதிய விண்ணப்பங்களை வழக்கம் போலவே
உரிய படிவங்களில் நிரப்பி தங்களது 
மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

09/12/2019 முதல் தங்களது விவரங்களை ONLINE மூலமாக SAMPANN எனப்படும் DOTயின் ஓய்வூதிய மென்பொருள் மூலம் நிரப்ப வேண்டும்.

SAMPANNல் USER ID அவரவரது 
வருமானவரிக் கணக்கு எண் PAN NUMBER ஆகும்.
முதன்முறையாக admin@123 என்ற கடவுமொழி
PASSWORD பயன்படுத்த வேண்டும். 
அதன்பின் அவரவர் தங்களின் கடவுமொழியை மாற்ற வேண்டும்.
எல்லாவித தகவல்களும், OTP எனப்படும் தற்காலிக கடவுமொழிகளும்
ஊழியரின் அலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும்.
எனவே ONLINE ஓய்வூதியப் பணிகளுக்கு
அலைபேசி எண் என்பது மிக மிக அவசியம்.

எனவே அனைவரும் 02/12/2019க்குள் ESS இணையத்தில் 
தங்களது செல்போன் எண்ணைப்பதிவு செய்ய வேண்டும். 
செல்போன் எண்ணைப் பதிவு செய்யாதவர்களின் ஓய்வூதிய விண்ணப்பங்களைப் பரிசீலிப்பது தாமதப்படும்.

விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்த தோழர்கள்
உடனடியாக அந்தந்த பகுதித் தோழர்களின் உதவியோடு விண்ணப்பங்களை நிரப்பும் பணியில் ஈடுபடவேண்டும்.

No comments:

Post a Comment