Tuesday 19 November 2019


வழக்கம்போல்... வாபஸ்

நாம் எதிர்பார்த்தது போலவே...
இன்று முதல் நடைபெறவிருந்த 
மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரதம் 
பெருந்தன்மையோடு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதச்சம்பளம் இம்மாத இறுதிக்குள்
பட்டுவாடா செய்யப்படும் என்று நிர்வாகம் பதில் சொன்னதைத் 
தவிர பெரிதாக சொல்லிக்கொள்வதற்கு ஒன்றுமில்லை. 

நிரந்தர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் சம்பளம்,
பிடித்தங்களைச் செலுத்தாமை போன்ற பிரச்சினைகளும்
ஓய்வூதியத்தில் எழுப்பப்பட்ட பல்வேறு சந்தேகங்களும்
ஊழியர்கள் மத்தியில் போராட்ட உணர்வை கிளறி விட்டிருந்தன.
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தயாராகவே இருந்தார்கள்.
அதிலும் தங்களது விருப்ப ஓய்விற்கு முன்
ஒரு போராட்டத்தில் பங்கு பெற்று செல்வோம்
என்றெல்லாம் தோழர்களின் உணர்வு நிலை இருந்தது.
ஆயினும் வழக்கம் போலவே
எந்தவித உத்திரவாதமும் இன்றி இம்முறையும்
போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து சங்கக் கூட்டமைப்பில் ஒன்றுபட்ட...
ஒருமித்த கருத்து இல்லை என்பதும் புலனாகிறது.

கடந்த காலங்களில் கலக்கல் போராட்டங்கள்...
வருங்காலங்களில் விலக்கல் போராட்டங்கள்...
இதுவே இனி நம் வரலாறு...

களத்தில் கால்கள் ஓடுவதற்கு தயாராகவே இருக்கின்றன...
பாவம்... தலைகள்தான் கிறுகிறுத்துப் போய்விட்டன...

No comments:

Post a Comment