Thursday 18 May 2017

காரைக்குடி நிர்வாகத்துடன் சந்திப்பு

18/05/2017 அன்று….
காரைக்குடியில்
NFTE தமிழ்மாநிலச்சங்கம் மற்றும்
காரைக்குடி மாவட்டச்சங்கம் இணைந்து
காரைக்குடி பொதுமேலாளரைச் சந்தித்தன.
மாவட்டத்தின் தளர்ச்சிக்கான காரணம் மற்றும்  
வளர்ச்சிக்கான வருங்காலக் கடமைகள் பற்றி
மிக விரிவாக விவாதிக்கப்பட்டன.

தற்போது BSNL நிறுவனம் உள்ள நிலையில்
வருவாய்ப்பெருக்கம் மிக முக்கியம் என்றும்
அதற்காக சங்கங்கள் நிர்வாகத்துடன்
கரம் கோர்த்துப் பாடுபடவேண்டும் என
பொதுமேலாளர் வேண்டுகோள் விடுத்தார்.

பணிக்கலாச்சாரத்தைப் பாரம்பரியமாக
போற்றி வந்தது NFTE சங்கம் என்பதையும்
காரைக்குடி மாவட்டத்தை
வளர்ச்சிப்பாதை நோக்கி கொண்டுசெல்வதில்
நிர்வாகத்துடன் இணைந்து
NFTE இயக்கம் பாடுபடும் என்பதையும்
உறுதியாக நமது தலைவர்கள் எடுத்துரைத்தனர்.

மாவட்டத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபடும் அதேவேளையில்
ஊழியர்களின் பிரச்சினைகள் தீர்வின் மீதும்
காரைக்குடி மாவட்டம் உரிய கவனம் செலுத்த வேண்டும்
எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
பிரச்சினைகள் தீர்வில்
காலதாமதம் மற்றும் தொய்வு நிலை ஏற்பட்டால்
NFTE தமிழ்மாநிலச்சங்கம்
நேரடியாகப் பிரச்சினைகள் தீர்வில் தலையிடும் என்று
மாநிலச்சங்கத்தின் சார்பாக  உறுதியாக தெரிவிக்கப்பட்டது.

தொழிலாளர்களுக்கு…
தங்களது உரிமையைக் காக்கும் சங்கமும்…
தங்களுக்கு வாழ்வாதாரம் தந்த நிறுவனமும்…
இரு கண்கள் போலாகும்…
இரண்டையுமே காக்க வேண்டியது நம் கடமையாகும்….
ஒரு கையில் ஓசை எழும்பாது….
இரு கைகளே ஓசையை எழுப்பும்….
எனவே… நிர்வாகத்துடன் இணைந்து
புதியதொரு பாதையில் பயணிப்போம் என்ற
உறுதியுடன் கூட்டம் இனிதே முடிவுற்றது...

நீண்ட நேரம் தோழர்களுடன் உரையாடி….
வளர்ச்சிக்குப் பல்வேறு வழிகள் சொன்ன..
மாவட்டப்பொதுமேலாளருக்கு நமது நன்றிகள் பல…
தலமட்டத்திற்கு நேரடியாக வந்து பிரச்சினைகள தீர்விற்கு…
வழிவகை செய்த தமிழ்மாநிலச்சங்கத்திற்கு நமது நன்றிகள்…

மாநிலச்சங்கம் சார்பாக கலந்து கொண்ட தோழர்கள்
மாநிலச்செயலர் தோழர். நடராஜன்
மாநிலத்தலைவர் தோழர்.காமராஜ்
மாநில உதவிச்செயலர் தோழர்.முரளிதரன்
மாநில உதவிச்செயலர் தோழர்.முருகேசன்
மாநில உதவித்தலைவர் தோழர்.சென்னக்கேசவன்

காரைக்குடி மாவட்டச்சங்கம் சார்பாக கலந்து கொண்ட தோழர்கள்
மாநில அமைப்புச்செயலர் தோழர்.சுபேதார் அலிகான்
மாவட்டச்செயலர் தோழர்.மாரி
மாவட்டத்தலைவர் தோழர்.லால்பகதூர்
மாவட்டப்பொருளர் தோழர்.பாலமுருகன்
மாவட்ட உதவிச்செயலர் தோழர்.சுப்பிரமணி
மாவட்ட உதவிச்செயலர் தோழர்.ஜெயராமன்
முன்னாள் மாவட்டச்செயலர் தோழர்.முருகன்…

No comments:

Post a Comment