Monday 8 May 2017

மகிழ்ச்சி நிறை மார்க்ஸ் விழா...

செயலாற்றல் மிக்கது...
NFTE சென்னைத்தொலைபேசி...

மே 5 தன் செயல்களுக்கு சிகரம் வைத்து…
மாமேதை மார்க்ஸ் 200வது பிறந்த நாள் விழா
உழைக்கும் மக்களின் உன்னத மேதினவிழா..
ஆகிய இரு விழாக்களை ஒருங்கிணைத்து…
பல்வேறு தொழிற்சங்கத்தலைவர்களை அரவணைத்து…
அண்ணா சாலை தொலைபேசிநிலையத்தில்…
அரசியல் விழிப்பூட்டி… எதிரிகளை எரியூட்டி….
அற்புதமாக நடத்தி முடித்தது மறக்கவியலா காட்சி…

இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக NFTE... NFTCL
இயக்கங்கள் இணைந்து... 
இருபெரும் விழாக்களை நடத்திய காட்சி…
இணையற்ற சென்னைத்தொலைபேசியின் மாட்சி…

NFTE NFTCL மாநிலத்தலைவர்கள் தலைமையேற்க…
NFTE NFTCL மாநிலப்பொருளர்கள் முன்னிலை வகிக்க…
NFTCL மாநில செயல்தலைவர் வரவேற்புரை நல்கிட…
NFTCL மாநிலச்செயலர் உணர்வுரையாற்றிட..
FNTO, TEPU SEWA தலைவர்கள் சிறப்புரையாற்றிட…
புலவர் பூபதி கருத்தைக் கவர்ந்த கவிதையுரை தந்திட
SEWA அகிலஇந்தியத்தலைவர் தோழர்.பெருமாள்
அண்ணல் அம்பேத்கார்… மாமேதை மார்க்ஸ்
அருமைபெருமைகளை அற்புதமாக எடுத்துரைக்க…
தோழர்.மதிவாணன் மேதின வரலாறின் மேன்மை சொல்லி
இன்றைய அரசியல் அவலங்களை அம்பலப்படுத்தி…
இடிமுழக்கமாய் எழுச்சியுரையாற்றிட…
தோழர்.இளங்கோ நன்றி நவில…
நலமுடன் நடந்து முடிந்தது…
இருவிழா… இதயங்கவர்ந்த மேதினத்திருவிழா…

பாட்டாளி வர்க்க மேதையின் வரலாறு சொல்லி…
இன்றைய பாழாய்ப்போன பேதைகளின் நிலையைச்சொல்லி
தொழிலாளர்களுக்கு வர்க்க உணர்வூட்டிய…
சென்னைத்தொலைபேசி NFTE.. NFTCL சங்கங்களின்
பணி மேலும் முனைப்புடன் தொடர நமது வாழ்த்துக்கள்…

No comments:

Post a Comment