Tuesday 9 May 2017

புத்தர் போராடச்சொன்னார்
புத்தர் போராடச்சொன்னார்... 
எங்கெல்லாம் நன்னெறி
அபாயத்தில் உள்ளதோ
அங்கெல்லாம் போராடுங்கள்
வாயடைத்து நிற்காதீர்கள்

புத்தர் போராடச்சொன்னார்...
உயர்ந்த நன்னெறிகளுக்காக
உன்னத நன் முயற்சிகளுக்காக
தெளிந்த நல்லறிவிற்காக
தொடர்ந்து போராடுங்கள்

புத்தர் போராடச்சொன்னார்... 
ஒரு துறவியின் பணி என்பது
உலக இல்லறத்தாருக்கு உதவிடவும்
சாதி மதமற்ற சமதர்மத்தைப் படைத்திடவும்
அவர்களின் உரிமைகளுக்காக போரிடவும்

புத்தர் போராடச்சொன்னார்... 
அதர்மத்திற்கு எதிராகப் போராடுங்கள்
தர்மத்தை நிலை நிறுத்தப் போராடுங்கள்..
சமதர்மம் நிலைத்திடப் போராடுங்கள்
சாதிபேதம் ஒழிந்திடப் போராடுங்கள்

புத்தர்
காவி உடையில்
கலகக்காரர்களை உருவாக்கினார் என
அண்ணல் அம்பேத்கார் அழகாகக் கூறினார்

அன்றைய.. புத்தரின் காவிகள்
அதர்மத்திற்கெதிராய் கலகம் செய்தனர்
இன்றைய பித்தரின் காவிகள்காலிகள்
தர்மத்திற்கெதிராய் கலகம் செய்கின்றனர்
புத்தர் சொன்ன காவிகளாய் மாறுவோம்
போலிக்காவிகளுக்கு எதிராய்ப் போராடுவோம்

ஆம்புத்தர் போராடச்சொன்னார்

No comments:

Post a Comment