Wednesday 17 May 2017

NFTCL கிளை துவக்கம்

இராமேஸ்வரத்தில்... 17/05/2017 அன்று...
NFTCL கிளை துவக்கமும்... மேதினக்கொடியேற்றமும் 
கிளைத்தலைவர் ஜேம்ஸ் அவர்களின்
தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. 
கிளைச்செயலர் தோழர்.சேதுராஜன் அனைவரையும் வரவேற்றார். 

NFTE கொடியை மூத்த தோழர்.பாஸ்கரன் அவர்களும்
NFTCL கொடியை நீண்ட நாட்கள் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரியும்
தோழர்.சந்திரன் அவர்களும் ஏற்றிவைத்தனர்.

NFTCL மாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன் ஒப்பந்த ஊழியர்களின் 
பல்வேறு பிரச்சினைகளை விளக்கி உரையாற்றினார். 

கிளைச்செயலராக மூத்த தோழர்.ராஜன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். தலைவராக தோழர்.சந்திரன் அவர்களும், 
பொருளராக தோழர்.முருகன் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய கிளைச்சங்கம் சிறப்பாக செயல்பட நமது வாழ்த்துக்கள்.

எங்கெல்லாம்  NFTE கிளை உள்ளதோ….
அங்கெல்லாம் NFTCL கிளை உதயமாகும்…
எங்கெல்லாம்  NFTE கொடி பறக்கிறதோ…
அங்கெல்லாம் NFTCL கொடி பறக்கும்….
இதுவே... தோழர்களின்... மேதின உறுதி...

No comments:

Post a Comment