Sunday 21 May 2017

3வது ஊதிய திருத்தம்
THIRD WAGE REVISION

பொதுத்துறை அதிகாரிகளுக்கான 3வது ஊதியக்குழு அறிக்கை வெளியிடப்பட்டு விட்டது. ஆனால் ஊழியர்களுக்கான ஊதியக்குழு இன்னும் அமைக்கப்படவில்லை. ஊதியக்குழு அமைக்கப்பட்ட பின்புதான் பேச்சுவார்த்தை துவக்கப்பட வேண்டும். 
இதற்கு DPE வழிகாட்டுதல் வெளியிடப்பட வேண்டும். 
ஆனால் DPE இலாக்கா வழிகாட்டுதலை வெளியிடாமல்  தாமதப்படுத்துகிறது. எனவே நமது மத்திய சங்கம் இந்தப் பிரச்சினையில் தலையிடக்கோரி 09/05/2017 அன்று கடிதம் மூலம் பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருந்தது.

நமது சங்கத்தின் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு DPE இலாக்காவை பிரதமர் அலுவலகம் 
15/05/2017 அன்று கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது.

2012ல் நடத்த வேண்டிய 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையான ஊதியப்பேச்சுவார்த்தைக்கு உரிய வழிகாட்டுதலை DPE இலாக்கா 13/06/2013 அன்று.. ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கழித்தே வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊர் கூடி தேர் இழுத்தால் மட்டுமே…
ஊதியத்திருத்தம் உண்டு…

No comments:

Post a Comment