Monday 29 May 2017

செயற்கைக்கோள் தொலைபேசி சேவை

இந்தியாவில் இராணுவம் மற்றும் கடற்படையில் மட்டுமே செயல்படும்  செயற்கைக்கோள் தொலைபேசி சேவையை 
சாதாரண மக்களுக்கும் விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. 

தற்போது நமது தேசத்தில் 1532 இணைப்புகளே செயல்பட்டு வருகின்றன. இயற்கைப்பேரிடர் போன்ற காலங்களில்… தொலைத்தொடர்பு சேவை முற்றிலும் செயலிழந்து போகும் காலங்களில் செயற்கைக்கோள் தொலைபேசி மிக அவசியமாகிறது.

INMARSAT எனப்படும் INTERNATIONAL MOBILE SATELLITE ORGANISATION அமைப்புடன் இணைந்து நமது BSNL நிறுவனம் செயற்கைக்கோள் தொலைபேசி சேவையை அளித்திட முடிவு செய்துள்ளது. 

முதற்கட்டமாக இரயில்வே, இந்திய ராணுவம், எல்லைப்பாதுகாப்பு படை மற்றும் தேசியப் பேரிடர் மேலாண்மைக்குழுக்கள் போன்றவற்றிற்கு சேவை வழங்கப்படும்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் பொதுமக்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என நமது CMD தெரிவித்துள்ளார். 

தற்போது செயற்கைக்கோள் தொலைபேசியின் விலை ஏறத்தாழ 40 ஆயிரம் ஆகும். ஒரு நிமிடத்திற்கு 30 ரூபாய் முதல் 35 வரை கட்டணமாகிறது. அதிகப்படியான பயன்பாட்டிற்கு வரும்போது கட்டணங்கள் மிகவும் குறையும். 

தற்போதைய தொலைத்தொடர்பு சேவை செல்கோபுரங்களின் 
COVERAGE 25 முதல் 30 கிமீ வரையாகும். 
ஆனால் செயற்கைக்கோள் தொலைபேசி சேவையில் 
38000 கிலோமீட்டர் வரை SIGNALS கிடைக்கும்.

தொலைத்தொடர்பில் ஒரு மாபெரும் புரட்சிக்காக...
செயற்கைக்கோள் தொலைபேசி சேவை காத்திருக்கிறது…

No comments:

Post a Comment