Tuesday 6 January 2015

06/01/2015
காரைக்குடி..
முப்பெருங்காட்சிகள் 
தோழர்.குப்தா
இரண்டாம் ஆண்டு
நினைவஞ்சலி
 

ஒரு கோடி கையெழுத்து இயக்கம்
சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர்
தோழர்.குணசேகரன் துவைக்கி வைத்தல் 
கூட்டமைப்பின்
நாடு தழுவிய தர்ணா
கோரிக்கை முழக்கம் 

06/01/2015 அன்று காரைக்குடியில் 
தோழர் .குப்தா அவர்களின் 
நினைவேந்தல் நிகழ்ச்சி 
நெகிழ்ச்சியுடன் நடந்தேறியது.
சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் 
அன்புத்தோழர்.குணசேகரன் அவர்கள் 
மலரஞ்சலியுடன் தோழர் குப்தாவிற்கு 
புகழஞ்சலி செலுத்தினார்.

BSNL நிறுவனம் காக்க..
பிரதமருக்கு ஒரு கோடி கையெழுத்துக் 
கோரிக்கை விடும் இயக்கத்தை 
சிவகங்கை மாவட்டத்தில் எழுச்சியுடன் துவக்கி வைத்தார்.

கூட்டமைப்பின் தர்ணா போராட்டத்தை 
BSNLEU மாநில உதவிச்செயலர் 
தோழர்.செல்வின் சத்தியராஜ் துவக்கி வைத்தார். 
சிறப்புரையாற்றிய சிவகங்கை சட்ட மன்ற உறுப்பினர் 
தபால் தந்தி தொழிற்சங்க இயக்கத்தின் மாண்பையும்,
தலைமையின் பண்பையும் பெருமை பட எடுத்துரைத்தார். 
இந்த ஒன்று பட்ட இயக்கம் 
பொதுத்துறை காக்கும் இயக்கமாக, 
மக்கள் சொத்தைக் காக்கும் இயக்கமாக, 
தேசம் காக்கும் இயக்கமாக 
சமூகக்கடமை நிறைந்த இயக்கமாக 
பரிணமிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச்செயலர் தோழர்.நா.சாத்தையா, 
மாதர் சங்கத்தலைவர் தோழியர்.மஞ்சுளா, 
AITUC தலைவர் தோழர்.பழ.இராமச்சந்திரன்,
AITUC மாவட்டச்செயலர் தோழர்.கார்வண்ணன்,
CITU மாநிலக்குழு உறுப்பினர் தோழர்.சிவாஜி, 
CITU மாவட்டத்தலைவர் தோழர்.வீரையா, 
ஓய்வு பெற்றோர் சங்கங்களின் சார்பாக
தோழர்கள்.நாகேஸ்வரன், சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன் 
மற்றும் கூட்டமைப்பின் தலைவர்கள்,
பங்கேற்று தர்ணாவைச் சிறப்பித்தனர்.

அனைவருக்கும் கூட்டமைப்பின் சார்பாக 
நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.

No comments:

Post a Comment