Monday 19 January 2015

செய்திகள் 

BSNL  ஊழியர்களுக்கு பல்வேறு கடன் வழங்குவதற்காக 
அலகாபாத் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒப்பந்தம் 13/01/2018 வரை மூன்று ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும்.
-------------------------------------------------------------------------------------------------------
குடும்ப ஓய்வூதியம் FAMILY PENSION திருமணமாகாத மகன் மகளுக்கு அவர்களின் திருமணம் வரை வழங்கப்பட்டு வந்தது. அவ்வாறு ஓய்வூதியம் பெறுபவர்கள் உடல் ஊனமுற்றவர்களாகவோ, மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவோ, விதவையாகவோ  இருந்தால் அவர்களது திருமணத்திற்கு பின்னும் அவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கலாம் என அரசு உத்திரவிட்டுள்ளது. அத்தகையவர்கள் தங்களுக்கு வருமானம் ஏதும் இல்லை என வருடந்தோறும் சான்றிதழ் வழங்க வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------
01/01/2015 முதல் 2.2 சதம் உயர்வு பெற்ற 
IDA உத்திரவு BSNL நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------
30/01/2015 அன்று கடலூரில் அனைத்து தொழிற்சங்கத்தலைவர்கள் பங்கேற்கும் வேலை நிறுத்த விளக்க கருத்தரங்க கூட்டம் நடைபெறுகின்றது. நமது சங்கத்தின் சார்பில் பொதுச்செயலர் தோழர்.சந்தேஸ்வர்சிங் கலந்து கொள்கின்றார்.
---------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment