Wednesday 14 January 2015

பொங்கலோ.... பொங்கல்   

களத்து மேடு கார் பார்க்கிங் ஆச்சு...
கண்மாய்க்கரை ரியல் எஸ்டேட் ஆச்சு... 
குத்தரிசி காணாமல்  போச்சு..
குலவைச்சத்தம் ஊமையாப்  போச்சு...
மண்பானை பொங்கி மாமாங்கம் ஆச்சு ..
பனங்கிழங்கை பார்த்து பல வருஷமாச்சு..

குக்கரிலே பொங்கல் வச்சு...
குடும்பத்துடன் டிவி பார்த்து...
குதூகலமாக பொங்கட்டும்...
தமிழர் திருநாள் ...
தரணி புகழ் உழவர் திருநாள்...

No comments:

Post a Comment