Wednesday 7 January 2015

தேவகோட்டை 
ஒரு கோடி கையெழுத்துத் தொடர் நிகழ்ச்சி 
சுட்டு விரலில் மக்களுக்கு  மை தடவி
செங்கோட்டையில் ஆட்சி  பிடித்த  ஆட்சியாளருக்கு
 நம் கோரிக்கையை சுட்டிக்காட்டும் அன்றாடக்கூலி.

07/01/2015 அன்று தேவகோட்டையில் 
ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தின் தொடர் நிகழ்ச்சி  
NFTE  மாவட்டத்தலைவர்  தோழர்.முருகன்
 தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது. 

NFTE  மற்றும் BSNLEU  மாவட்டச்செயலர்கள் பங்கேற்றனர். 
கையெழுத்து தொடர் நிகழ்ச்சியை வாழ்நாள் ஒப்பந்த ஊழியர் தோழர்.நாகராஜன் துவக்கி வைத்தார்.

NFTE  கிளைச்செயலர் தோழர். பாலமுருகன், 
தோழர்கள்.ஞானம், சுபேதார் அலிகான், தமிழ்மாறன், நாகநாதன்,ஜான்சன்,மணிவாசகம் மற்றும் சுப்பையா 
ஆகியோர்  சிறப்புரையாற்றினர். 

 நாம் கோரிக்கை முழக்கம் எழுப்பியபோது FNTO தோழர் ஒருவர் கூட்டத்திலே  குறுக்காக வண்டி ஓட்டியது,  இந்தப் போராட்டத்தில் குறுக்குச்சால் ஓட்டும் அவரது சங்கத்தை நமக்கு நினைவூட்டியது. 

குறுக்குச்சால் ஓட்டுபவர்களும் மார்ச் 17 அன்று
 மனசாட்சி உந்திட மறுக்காமல் மறக்காமல் நமது வாழ்வாதாரப் போராட்டத்தில் பங்கு பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.  

5000 கையெழுத்து அவசியம் பெற்றுத்தர   உறுதி சொன்ன 
தேவகோட்டை தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள். 

No comments:

Post a Comment