Monday 19 January 2015

 தப்பிசையில்.. ஆள்வோர்களின் தப்புக்களை சாடிய பாரதி கலைக்குழு..
அண்ணல் காந்தி.. ஆசான் ஜீவா.. வழியில்.. அடியொற்றி  வாழும் தோழர்.நல்லக்கண்ணு.. உடன் நமது தோழர்கள்..





18/01/2015 அன்று ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற
 காரைக்குடி சிராவயலில் தோழர்.ஜீவா அவர்களின் 
52வது நினைவுதின சிறப்புக்கூட்டம் சிறப்புற நடந்தேறியது. 
சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் தோழர்.குணசேகரன் தலைமையேற்க.. 
ஊராட்சி மன்றத்தலைவர் திரு.வேலுச்சாமி முன்னிலை வகிக்க...
தோழர்.ஜீவா ஆசிரமம் நடத்திய இடத்தின் உரிமையாளர் 
திரு.மெய்யப்ப செட்டியார் வரவேற்புரையாற்ற..

ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்க அமைப்பாளர் தோழர்.புரட்சித்தம்பி...
எழுத்தாளர் தோழர்.சந்திரகாந்தன்,
 பேராசிரியர்.பழனி இராகுலதாசன்...
திமு முன்னாள்  அமைச்சர் திரு.பெரியகருப்பன்..
 ஆகியோர் சிறப்புரையாற்ற...

 தோழர்.நல்லக்கண்ணு... தோழர்.ஜீவா பற்றிய 
அனுபவங்களை சிந்தனைகளை எடுத்துரைத்தார். 
பாரதி கலைக்குழுவினரின்  பாடல்கள் இன்றைய
 சமுதாய அவலங்களின் சாடல்களாக அமைந்தது.

சிராவயல் தோழர்.சுப்பிரமணியன் நன்றியுரைக்க..
 அடுத்த ஆண்டு 53வது  நினைவு தினத்தில்
தோழர்.ஜீவா ஆசிரமம் நடத்திய இடத்தில் 
ஜீவா நினைவுக்கூடமும், கல்விக்கூடமும் 
எழுப்பிட உறுதி பூண்டு கூட்டம் 
இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment