Saturday 31 January 2015

கடலூர் கருத்தரங்கத் திருவிழா...

அனைத்து சங்க கூட்டமைப்பின் 
கருத்தரங்கத் திருவிழா..
கடல்களின் சங்கமமாய்...
கடலூரிலே.. ஜனவரி 30 அன்று...
BSNL காப்போம்.. தேசம் காப்போம்..
என்னும் ஓன்று பட்டகுரல் எழுப்பி 
எழுச்சியுடன் நடந்து முடிந்துள்ளது.

கைகலப்புக்கு பெயர் பெற்ற கடலூரிலே..
கலகலப்பாய் இருந்தது...
கண்கவர் கூட்டமைப்பு மேடை...

பல தோழர்களைச் சந்தித்த போது 
ஓன்று பட்ட NFPTE சங்கத்தின் 
அந்த நாள் ஞாபகம்...
நெஞ்சிலே வந்தது...

BSNLன்.. 
இன்றைய நிலை அறிந்து...
இணக்கத்துடன் ஒற்றுமைக்குரல் கொடுக்கும் 
இயக்கத் தலைவர்களுக்கு 
நமது வாழ்த்துக்கள்...

கண்கவர் விளம்பரங்கள்... அதில் 
கருத்தாழம் மிக்க சொற்றொடர்கள்...
ஆயிரம் ஆயிரம் திரண்டு வந்தாலும்..
அன்பான.. அலுக்காத உபசரிப்பு..
தலைமை சொல்வதை 
தட்டாமல் கேட்கும் பாங்கு..  என
தனக்கென ஒரு முத்திரை கொண்டு..
தனது பாரம்பரியம் மாறாமல்..
கருத்தரங்கம் நடத்திட்ட..
கடலூர் தோழர்களுக்கு...
நமது கனிவான 
வாழ்த்துக்களும்... வணக்கங்களும்..

1 comment:

  1. கருத்தரங்கம் நடத்திய எங்களை கவியரங்கத்தால் நெகிழசெய்த காரை மாமன்றமே உங்களுக்கெங்கள் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete